காணி தகராறு காரணமாக மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர்.
- Advertisement -
குறித்த சம்பவம் தலங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. 74 வயதான உயிரிழந்த பெண்ணுடன் அவருடைய கணவருக்கு இருந்த காணி தகராறே கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
- Advertisement -
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.