15 வயதுடைய மாணவனின் வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதான பெண் ஆசிரியையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரே கைதாகினார். அவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் நளின் இம்புல்கொட உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியுடன் சிறுவன் வளர்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவனின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஆசிரியை வந்து, மாணவனுடன் தங்கியிருந்துள்ளார்.
சிறிய தாய் வீட்டிற்கு வந்த போது, ஆசிரியரும், மாணவனும் வீட்டு அறையின் சோபாவில் அமர்ந்திருந்ததையும் மாணவனின் முகத்தில் ஆசிரியர் முத்தமிடுவதையும் கண்டுள்ளார்.