திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார்.
- Advertisement -
அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரணத பரீட்சையில் உயிர்ழந்தவரின் மகள் 9 A பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.