துபாய் நாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- Advertisement -
தெமட்டகொட பகுதியில் வாடகை வீடொன்றில் வைத்தே 30 வயதுடைய கணவன் மற்றும் மனைவி இருவரையும் காவல்துறையினரால் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதலின் போதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மக்களிடம் மோசடி செய்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்கை வாழ்ந்துவந்ததாக காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தம்பதி யக்கல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை பெற்றதாக யக்கல காவல்துறையினருக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.