இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையாகவுள்ள எரிபொருளை வழங்குவதற்கு கடும் நெருக்கடி நிலவும் நிலையில், அவர்களுக்கான எரிபொருளை சீனா வழங்கவுள்ளது.
- Advertisement -
இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடற்தொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- Advertisement -
எரிபொருள் தட்டுப்பாட்டினால் சந்கைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. அத்துடன் நெல் விவசாயிகளும் எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சீனாவினால் இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 1 கோடியே 6 இலட்சம் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அதில் 75 இலட்சம் லீற்றர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன. குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச்செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப் பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சீனாவினால் விவசாயிகளுக்கு இந்த எரிபொருள் தொகை இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.