இலங்கையர்களுடன் கப்பல் மூழ்கிய தகவலையறிந்த மறுநிமிடமே, அதில் பயணித்த இளைஞன் ஒருவரின் காதலும் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.
- Advertisement -
குறிப்பிட்ட இளைஞனிற்கு, தனது மைத்துனி மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மைத்துனி காதலை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இளைஞனிற்கு நிரநதரமான வேலை இல்லையென்பதால், அவர் காதலை ஏற்கவில்லையென கூறப்படுகிறது.
- Advertisement -
இதையடுத்து, காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதற்காக “வெளிநாட்டு மாப்பிள்ளை“ ஆவதற்காக அந்த படகில் இளைஞனும் பயணித்துள்ளார்.
ஒக்ரோடபர் 8ஆம் திகதி படகு பயணத்தை ஆரம்பித்ததும், அந்த தகவல் கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர், உறவுகளிற்கு இடையில் பரவியிருந்தது.
இந்த தகவலை அறிந்ததும், காதலியின் பெற்றோர் , அடுத்தடுத்த நாளில் மோதகத்துடன் இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
என்றாலும், கப்பல் சிக்கிய தகவல் அறிந்த பின்னர், இளைஞனின் குடும்பத்தாரின் தொலைபேசி அழைப்புக்களிற்கே பதிலளிப்பதில்லையென குறிப்பிடப்படுகிறது.