2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
விடைத்தாள்கள் தேர்வு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
இந்நிலையில் கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் பொதுப் பரீட்சை இடம்பெற்றதுடன், அதில் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 517,486 ஆகும்.
இவர்களில் 407,129 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள், மேலும் 590 விசேட தேவையுடைய சிறுவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.