கண்டி, அலதெனிய பகுதியில் வளர்ப்பு நாயொன்றினால் தொலைந்த பணமும் நகையும் திரும்ப கிடைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
- Advertisement -
குறித்த நாய் தெருவில் இருந்த பணப்பையை ஒன்றை கௌவிக்கொண்டுவந்த சிறிய பணப்பை ஒன்றில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க சங்கிலி ஒன்றும், 7 ஆயிரம் ரூபா பணமும் இருந்துள்ளது.
- Advertisement -
அதனை கண்ட வீட்டு உரிமையாளர்கள், உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த சம்பவமொன்று கண்டி, அலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அலதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள குருந்துகஹமட என்ற இடத்தில் பணப் பை ஒன்றை நாய் ஒன்று கவ்விக் கொண்டு வந்துள்ளது. அந்த பை வீதியோரம் விழுந்திருந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி வளர்ப்பு நாய் அடிகடி பாதணிகளை இவ்வாறு கவ்விக்கொண்டு வருமென நாயின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த நபர் அந்த நாய்கொண்ட வந்த மேற்படி பணப் பையை பரிசீலித்த போது அதில் பணம் மற்றும் தங்கச் சங்கிலி என்பன காணப்பட்டுள்ளள.
மேலும் அந்த பையினுள் காணப்பட்ட தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்த போது அது அக்கிராமத்தில் அயலில் உள்ள ஒருவர் என்றும் அவர்களது பணப்பை காணாமல் போனமையும் தெரியவந்துள்ளது.
பின்னர் அலதெனிய பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து பணத்தையும் தங்க நகையையைும் மீள ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.