நாட்டில் உள்ள பாடசாலைகளில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.ஹெரோயின் என்ற போதைப்பொருள் முதல் தற்போது ஐஸ் வகை போதைப்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக அறியமுடிகிறது.இவர்களை நாம் காப்பாற்ற வேண்டும்.சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.இதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- Advertisement -
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த: அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கான சுற்றறிக்கைகள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக அனுப்பப்படவுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்கள் புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்னர்.இதற்கான பணிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் உள்வாங்கப்படவுள்ளனர் என்றார்.