அண்மைக்காலமாக கௌரவுங்களிற்காக தங்கள் பெயரின் பின்னால் பட்டங்கள் சேர்த்தது வைத்திருப்பதில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- Advertisement -
இதனை சாதகமாக பயன்படுத்தி சில போலியான தனியார் பல்கலைக்கழக நிறுவனங்கள், யாழ் மற்றும் கிழக்கை சேர்ந்த கல்விமான்கள் பலருக்கு போலியான ‘கெளரவ கலாநிதி’ பட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- Advertisement -
சில வருடங்களுக்கு முன்னர் ‘ Global Peace University’ என்கிற போலியான பல்கலை கழகம் ஒன்றில் பெயரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலருக்கு ‘கெளரவ கலாநிதி’ பட்டங்கள் விற்கப்பட்டு இருந்தது.
அதாவது மேற்படி பட்டங்களுக்காக சுமார் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணமும் பட்டங்களை பெற்றவர்களிடம் வசூலித்து இருந்தார்கள். அந்த வரிசையில் தற்போது கொழும்பில் ‘American Graduation Ceremony’ என்கிற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கை சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வி அதிகாரிகள் சிலருக்கு ‘கெளரவ கலாநிதி’ பட்டங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது . இந்த தடவையும் மேற்படி பட்டங்களுக்காக காசு வசூலிக்கப்பட்டு இருக்கின்றது .
வெறும் போலி கெளரவத்திற்காக எந்த முயற்சியும் இன்றி பணம் கொடுத்து பட்டங்களை சேர்ப்பதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
இவ்வாறான போலி பட்டங்களுக்கு எந்த பெறுமதியும் இல்லை என்பதை கூட புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் தனது முகப்புத்தக கணக்கில் தன ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.