அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
- Advertisement -
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.
- Advertisement -
கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களினதும், அரச அதிகாரிகளினதும் தலையாய பொறுப்பாகும். எனவே எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், செயல் திறன்மிக்க சேவையை வழங்க வேண்டும்.
இதன் மூலம் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முறையான பதில் அளிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து தகவல்களைக் கோரும் போதும் இந்த செயல்முறையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) சிசிர ஹேனாதிர, தகவல் அதிகாரியாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்சன ஜயவர்தன பதில் அதிகாரியாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பின்வரும் இலக்கங்கள் ஊடாக தகவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிர ஹேனாதீர – ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்)
கைபேசி இலக்கம் – 0718132590; அலுவலக இலக்கம் – 0112354329/0112354354
கலாநிதி சுலக்சன ஜயவர்தன – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்
கைபேசி இலக்கம் – 0719994133/0711992354: அலுவலக இலக்கம் – 0112354329/0112354354
மின்னஞ்சல் முகவரி – addlsec.fsd@presidentsoffice.lk
அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் போது கடிதங்களை அனுப்பும் நபரின் முகவரி வதிவிடத்திற்கான தனிப்பட்ட தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிடுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.