பண்டாரவளையில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் அருகில் நேற்று ஒரு மாத கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பண்டாரவளை அம்பேவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் இந்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நேற்று நண்பகல் இந்த சிசு வளாகத்தில் விடப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் குழந்தையை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
ஒரு பெண் பொலிஸ் அதிகாரி குழந்தையை கவனித்துக் கொள்ளவும், உணவளிக்கவும் முன்வந்தார்.