பராமரிப்புத் துறையில் அதிக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தற்போது இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
- Advertisement -
இதன்போது மேலும் பகிர்வுகளை வழங்கிய அவர், “சமூக பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, பராமரிப்பாளர், வீட்டு செவிலியர்கள், செவிலியர், செவிலியர் உதவியாளர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் போன்ற பல்வேறு வகையான வேலைகளை பராமரிப்பு துறை வழங்குகிறது.
- Advertisement -
இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, சிங்கப்பூர், மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளும் இவ்வாறான வாய்ப்புகளை அதிகளவில் வழங்குகின்றன.
தற்போது 27,000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் தனியார் துறை நிறுவனங்களால் கோரப்பட்டுள்ளன. ஆனாலும், துரதிர்ஷ்டமாக ‘மொழித் தடை’ காரணமாக அவர்கள் தகுதியானவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். சில நாடுகளில் 250,000 முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சம்பளத்தை பராமரிப்புத் துறை வழங்குகிறது” என்றார்.