நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
முட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- Advertisement -
முட்டைகளை அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்தால் வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவதோடு, வியாபாரத்திற்கு தேவையான கால்நடை தீவனம், போக்குவரத்து கட்டணங்கள் இதை விட அதிகமாக செலவாகிறது என அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடதக்கது.