சுவிஸ்லாந்திலிருந்து வந்த 38 வயதான இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி கிறீஸ்தவசபை ஒன்றுக்கு மதம் மாற்றியுள்ளார் அச்சபையின் போதகர். அத்துடன் அந்தப் பெண் அணி வந்திருந்த 51 பவுண் தாலிக்கொடி மற்றும் 40 பவுண் நகைகளையும் தன்வசப்படுத்தி அவற்றை விற்று சபையின் சொத்தில் சேர்த்துள்ளதாக குறித்த பெண்ணின் கணவரால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
சுவிஸ்லாந்தில் முழங்கால் வலி காரணமாக நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த குறித்த குடும்பப் பெண்ணுக்கு “செய்வினை” என யாரோ தெரிவித்து அதற்கு பரிகாரம் செய்யக்கூடிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக கூறியுள்ளார்களாம்.
- Advertisement -
இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை தனியே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியுள்ளார் கணவர். அங்கு செய்வினைக்கு பரிகாரம் செய்தவரான மதபோதகரின் பரிகாரத்தில் மயங்கியே தன்னையும் தான் அணிந்துவந்திருந்த நகைகளையும் போதகரிடம் கொடுத்துள்ளார் குடும்பப் பெண்.
இதனையறிந்த கணவர் மற்றும் இரு பிள்ளைகளும் தற்போது யாழ்ப்பாணம் வந்து பொலிசாரிடம் அலைந்து திரிவதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.