திக்வெல்ல – உடதெனிய பிரதேசத்தில் பக்க வீதியொன்றில் சிறு குழந்தையொன்று துவிச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் உயிரிழந்துள்ளது.
- Advertisement -
குறித்த குழந்தை நேற்று பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்து, அது ஆரம்பிக்கும் முன்னர் மற்றுமொரு மாணவனுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
- Advertisement -
துவிச்சக்கர வண்டியின் பிரேக் செயலிழந்ததால் காயமடைந்த இரு மாணவர்களும் டிக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துவிச்சக்கர வண்டியின் முன்பகுதியில் அமர்ந்திருந்த குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.