இலங்கையில் மக்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
- Advertisement -
அதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொதியொன்று வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
- Advertisement -
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு அதிகரிப்பு காரணமாகும்.
இதனால் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளது.