P.P.T Express போக்குவரத்து சேவை தொடர்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒருவர் முகநூலில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
- Advertisement -
போக்குவரத்து சேவையில் மிகவும் தரமான சேவை P.P.T Express. பொதிகளுக்கு மட்டுமே பயணிகளுக்கு அல்ல. நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வெளிக்கிட்ட பஸ் அனுராதபுரத்தில் பழுந்தடைந்தது. பழுதடைந்த பஸ்ஸில் இருந்து பொதிகள் உடனடியாக அடுத்த பஸ்ஸில் ஏற்றப்பட்டது. ஆனால் பயணிகளுக்கு எந்த வித அறிவிப்பும் உடனடியாக வரவில்லை. வந்த அனைவரையும் தங்களுடைய 10:00pm ஆசணம் இல்லாத பஸ்ஸில் ஏற்றினார்கள்.
- Advertisement -
அதிலிருந்து யாழ்ப்பாணம் வரை 17 பயணிகளுக்கு நின்றபடி பயணம். அதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட. வேற பஸ்ஸில் கூட பயணிகளை ஏற்றி விட வில்லை காரணம் பணம் சம்பாதிக்க வேண்டிய காரணத்தால்.
அது மட்டுமல்ல செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முயன்ற போது யாழ்ப்பாணம் வந்து விட்டீர்கள் தானே என்ற பதில் மட்டுமே வந்தது. இவர்களின் பஸ்ஸில் 3500 செலுத்தி நிண்டு வருவதற்கு இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் அல்லது தனியார் பஸ்ஸில் வசதியாக வந்து விடலாம்.
கொழும்பில் 8:00pm வெளிக்கிட்ட பஸ் யாழ்ப்பாணம் காலை 07:00 மணிக்கு வந்தடைந்தது.இனி பயணம் மேற் கொள்ளபவர்களுக்கான பதிவு இது. இவ்வாறு பொதிகளுக்கு முக்கியதுவம் காட்டுபவர்கள் ஏன் பயணிகள் சேவையினை மேற்கொள்கிறார்கள்.
என பாதிக்கப்பட்ட நபர் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்