வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலைகளை நடத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று 15 திகதி ஏறக்குறைய 80% பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாகவும், இந்த நிலைமையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- Advertisement -
போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
- Advertisement -
சில ஆசிரியர்கள் தமது மாதச் சம்பளத்தில் 1/3 பங்கு போக்குவரத்துச் செலவுகளாகச் செலவிடுவதாகவும், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு நாளாந்தம் 600 ரூபாவுக்கு மேல் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே பாடசாலை சேவையில் ஈடுப்படும் வேன்களுக்கு சலுகை அளிப்பதோடு, அரச பேருந்தில் குறைந்த கட்டணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் திட்டத்தை தயாரிக்குமாறு கல்வி அதிகாரிகளிடமும், அரசாங்கத்திடமும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த கட்டணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை தயாரிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் அவ்வாறான திட்டம் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏறக்குறைய 80% பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு வந்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில், வரும் நாட்களில் எத்தனை மாணவர்கள் பாடசாலைக்கு வரலாம் என்று சொல்ல முடியாது, ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.