அம்பாறையில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -
இவர் ஒரு பிள்ளையின் தந்தையான, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவராவார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.