யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் பிரதேச செயலக, மாவட்ட செயலகப் பணியாளர்களை அந்தக் கடமையிலிருந்து விலகி தமது வழமையான அலுவலகக் கடமைக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது
- Advertisement -
அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் யாழ். மாவட்ட செயலர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.