எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிக்கல் காரணமாக தொடர் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
- Advertisement -
வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன்) மட்டுமே பாடசாலைகளை நடத்தவும், ஏனைய இரண்டு நாட்களில் (புதன், வெள்ளி) இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடரவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
- Advertisement -
எனினும், தற்போது தென் மாகாணத்துக்கு உட்பட அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை வாரத்தில் 5 நாட்களிலும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.