விடுதலை புலிகளிடமிருந்து பெற்ற பணமே போதும் நாட்டு பிரச்சினைகளை தீர்க்க என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் போராட்டக்காரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -
அதன்படி அவர்கள் தெரிவிக்கையில், உண்மையில் நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம். எங்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தினீர்கள்? நாங்கள் இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.
ரணிலை நிச்சியம் வீட்டிற்கு அனுப்பவோம். உங்களிற்கு தெரியாது எங்களிற்கு அவர்கள் தாக்குதல் நடத்திய விதம். அன்று 9ம் திகதி எங்களுடன் இணைந்தது போல எங்களுடன் இணையுங்கள் நாட்டை வீணடித்துள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்.
அங்கு பிரதமர் பதவி பிரமாணம் எடுக்கின்றார் ஆனால் மக்கள் மீது இங்கு தாக்குதல் நடத்துகின்றனர். பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் கழுதைகள் போல செயற்படுகின்றனர்.
அன்று யுத்த காலங்களில் பல நாடுகளில் உதவி கிடைத்தது டொலர்கள் கிடைத்தன. அத்துடன், விடுதலை புலிகளிடம் இருந்து பெற்ற பணமே போதும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
இதன்போது போராட்டக்கள பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நீங்கள் இங்கு நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கின்றீர்கள். நீங்கள் எங்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினீர்கள் எங்களால் மூச்சு எடுக்க முடியாமல் இருந்ததது.
ஆனால் நாங்கள் இந்த கட்டிடத்தை பாதுகாத்தோம் வேறு ஒன்றும் செய்யவில்லை. உங்களை நினைக்க அவமானமாக உள்ளது உங்கள் சீருடைகளை அகற்றுங்கள் அதை அணிவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது மகன் ஒருவர், எனது தந்தை ஓய்வு பெற்ற இராணுவ வீரர். அவர்கள் 30 ஆண்டு யுத்தம் செய்தனர். ஆனால் அவர்கள் அமைதியாக போராடியவர்களை தாக்கவில்லை. தற்போது போராட்டக்காரர்கள் வைத்தியசாலையில், அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. புத்தகத்தை தான் பாதுகாத்தனர் என கூறியுள்ளார்.