புத்தல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு உணவிற்காக பாண் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரித்தனர்.
- Advertisement -
புத்தல கதிர்காமம் வீதியில் ராஜபக்ஷ மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் இராணுவ பொறியியலாளர் படையின் ஓய்வுபெற்ற சிப்பாய் வித்யாரத்ன மதியலகே வித்யாரதன என்ற 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
- Advertisement -
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.