அரச ஊழியர் ஒருவரின் குடும்ப அட்டையில் “அ ,உ” காட் மாற்றும் விடயம் தொடர்பாக இடம்பெற்ற தர்க்கத்தில் இரண்டு அரச உயர் அதிகாரியும்,அரச ஊழியரும் ஊழியர்கள் மாறி மாறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.ஒரு அரச உயர் அதிகாரி தன்னை தாறுமாறாக பேசியதாக தெரிவித்து , அரச அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
- Advertisement -
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நான் திருநெல்வேலியில் வசிக்கின்றேன். 20.07.2022 அன்று எமது பிரிவில் உள்ள கிராமசேவகரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது .அதில் ‘ அ ‘ கார்ட் ஐ என்பதை ‘ உ ‘ என்று மாற்றியது யார் என்றார் . நான் சொன்னேன் இரண்டு வாரத்திற்கு மேல் தங்கள் அலுவலகத்தில் பெற்றோல் வெள்ளை கார்ட் பதிவிற்காக வைத்திருந்தீர்கள் . எனக்கும் இதற்கும் சம்மத்தம் இல்லை என்றேன் .
அத்துடன் இது உங்கள் தவறு என்றேன் .பின்னர் நான் நல்லூர் பிரதேச செயலாளருடன் நேரில் சென்று தெரிவித்தேன். அதற்கு அவர் இது சம்மந்தமாக காலையில் கதைக்கப்பட்டது . இது பற்றி பார்ப்போம் என்றார்.
பின்னர் பெற்றோல் கார்ட் பதிவு செய்யப்படும் 5 ம் அறையில் AD என்னும் பதவியில் உள்ளவர் , என்னை தொலைபேசியிலும் , நேரிலும் கள்ள கார்ட் பதிந்த கள்ள நாய்களே என்றும் பல தடவைகள் உறுத்திப் பேசினார்.
அரச அலுவலர் நீங்கள் இப்படி கதைக்க வேண்டாம் என்றேன் நான் . மீண்டும் அவர் என்னை அப்படி சொன்னதற்கு நான் ‘ உடைப்பனடி ‘ என்று நானும் உறுத்துப்பேசினேன். பின்னர் நல்லூர் பிரதேச செயலகர் என்னை வெளியில் போகும் படி சொன்னார் . உடனே நான் யாழ்ப்பாணம் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.