வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கம் மற்றும் அதற்குரிய திகதியின்படி, நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நாளை (21) ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இன்று (20) பிற்பகல் இதனைத் தெரிவித்தார். ஆரம்பிக்கப்படவுள்ள எரிபொருளின் விநியோகத்திற்கு ‘தேசிய எரிபொருள் உரிமம்’ பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கமான 3, 4, 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் மாத்திரம் நாளையதினம் எரிபொருள் பெற வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.