நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அழுத்தம் கொடுத்த 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இவர்கள் சமூக வலைத்தளம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தியுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரித்துள்ளது. இவர்களின் தகவல்களை முகநூல் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.
- Advertisement -
“ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம்” என இந்த நபர்கள் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பதிவு இட்டிருந்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த நபர்களில் காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன தேரர், அனுருத்த பண்டார உட்பட நான்கு பேர் இருப்பதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.