கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இலங்கையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவுக்கு தப்பி சென்றதுடன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றதுடன், அங்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை நேற்றைய தினம் (16-07-2022) சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், (Kasi Viswanathan Shanmugam) சிங்கப்பூர் அரசால் இனி பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.