QR குறியீட்டை பெற்ற பின்னர், வாகனத்தின் நம்பர் பிளேட்டின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிபொருள் கூடம் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்தாலும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்று முதல் எரிசத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ,இணையத்தளத்துடன் இணைக்கப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.