ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்று அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில்
ஊரடங்குச் சட்ட ம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இதற்கிடையில் பிரதமராக டலஸ், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க,
தினேஷ் குணவர்தர்ன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுட்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பதவியேற்ற கையோடு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப்போவதாக ரணில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.