அரச தலைவர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன.
- Advertisement -
கொழும்பில் போராட்டம் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக சிறிலங்கா இராணுவ உலங்குவானூர்திகள் போராட்ட இடங்களுக்கு மேலே பறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
அதேவேளை அங்கு கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதமர் அலுவலகம் முன் பெருமளவான மக்கள் ஒன்று கூடி பெருமளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த 9 ஆம் திகதி பாரிய போராட்டத்தையடுத்து அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பன போராட்டக்காரர் வசமானது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அரச தலைவர் மாளிகையில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெறும் போராட்டக் களம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக தென்னிலங்கையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.