தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்படும் வரை, தான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக India Today செய்தி வெளியிட்டுள்ளது.
- Advertisement -
எதிர்கட்சியுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், எந்தவொரு தரப்பும் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
தான் எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கடந்த 9ம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்திருந்தார்.
அன்றைய தினம் இந்த தகவலை சபாநாயகர் உறுதிப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு நாட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் இடமாளிக்காமையை அடுத்து, தனது பயணத்தை அவர் ரத்து செய்திருந்தார்.
இந்தநிலையில், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகாத பட்சத்தில், கொழும்பில் இன்று (13) போராட்டம் வலுப் பெரும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது