இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவி விலக்கோரி நாட்டு மக்கள் கடந்த சனிக்கிழமை (09-07-2022) பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
- Advertisement -
இந்த நிலையில் கோட்டாபய நாளை தினம் (13-07-2022) பதவி விலகுவதாக அறிவித்திருப்பதாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- Advertisement -
இவ்வாறான ஒரு நிலையில் கோட்டாபய அவரது மனைவி அயோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரி மஹிந்த ரணசிங்க ஆகியோர் கட்டுநாயக்காவில் இருந்து மாலைத்தீவில் உள்ள மாலே நகரத்தை நோக்கி விமானப்படை போக்குவரத்து விமானத்தில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.