ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு இந்திய செய்திச்சேவை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
முன்னதாக போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், தாம், எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவி;த்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலை மோசமடைந்ததையடுத்து, தாம் பதவி விலகத்தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்தார்.
இதனையடுத்து பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பலரும் தற்போது தமது பதவி விலகலை அறிவித்து வருகின்றனர்.