நாட்டில் நாளைய தினம் (06-06-2022) முழுமையாக பேருந்துகள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
- Advertisement -
தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.