உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் புதிய வீசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
எந்தவொரு நாட்டின் பிரஜையும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடையவராக கருதப்படுவதுடன், விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு வேலை வாய்ப்புகள் அவசியமில்லை எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பட்டத்தின் தகைமைக்கமைய விண்ணப்பதாரர்களின் வீசா காலம் நீடிக்கப்படுமெனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது