நாளை முதல் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை, இன்றைய தினம் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் நாளைய தினமும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நேற்றைய தினம் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.