ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து கண்டிப்பான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதில் முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
- Advertisement -
அதோடு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.