பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- Advertisement -
2022ம் ஆண்டிற்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலமாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தது.
- Advertisement -
இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு பாடசாலை நேரத்தினை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தினை உள்ளடக்க முடியாத பட்சத்தில், 3ம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.