யாழ் மட்டுவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று, புத்தாண்டு தினத்தில் விசித்திர சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது!
- Advertisement -
புத்தாண்டு தினத்தில் பாரம்பரிய முறையாக பெரியவர்கள் கைவிசேடம் கொடுப்பது வழமை. இருப்பினும் கைவிசேடம் தருமாறு கேட்டு, அதை கொடுக்க மறுத்தவர் மீது இரும்பு கத்தியால் தாக்கிய துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
- Advertisement -
பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நபர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.