நாட்டில் எரிபொருளை பயன்படுத்தும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் ஒன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ளது.
- Advertisement -
அந்தவகையில் எதிர் வரும் பண்டிகை காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைக்கிறது என்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே தேவையற்ற விதத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி நிற்பதை தவிர்த்து கொள்ளுமாறும் தெரிவித்தார்.
கொள்கலனில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்வரும் நாட்களில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நாட்டின் சகல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.