யாழில் காணாமல் போன பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
- Advertisement -
கொலை செய்யப்பட்டவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி அரியாலை,மணியந்தோட்டம் பகுதியில் காணாமல் போன குடும்ப பெண் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கொலைக்கு ஆளாக்கப்பட்ட நபர் ஜெசிந்தா என்பதும், சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து புதைத்ததாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -
மேலும் இவர்களோடு இவர்களுக்கு உதவிய இளைஞன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜெசிந்தா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரிடம் 3 லட்சம் கடன் பெற்ற நபரிடம் பணத்தைக் கேட்ட ஜெசிந்தாவை கடன் பெற்ற நபர் கொலை செய்துள்ளார். மேலும் பெண்ணின் சடலத்தையும் அவரது மோட்டார் வாகனத்தையும் தனது வீட்டின் பின்புறத்தில் கணவன் , மனைவி புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் தாயைக் காணாததை தொடர்ந்து மகன் செய்த முறைப்பாட்டின் போதே பொலிஸார் நடத்திய விசாரணையில் கணடறியப்பட்டது.