முன்அறிவித்தல் இன்றி ரயில் கட்டணங்களை அதிகரிக்க எடுத்துள்ள தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நகரங்களுக்கு இடையிலான ரயில்கள் மற்றும் தூர இடங்களுக்கான விசேட ரயில் சேவைகளின் கட்டணங்களை அதிகரிப்பது சம்பந்தமாக திருத்தப்பட்ட கட்டண விவரங்கள் அமைச்சுக்கு கிடைப்பதற்கு முன்பாக ஏதோ ஒரு வகையில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முறையற்ற செயற்பாடு எனவும் அமைச்சர் கூறினார்.
- Advertisement -
அத்துடன் எந்த ஒரு ரயிலுக்கும் நேற்று இரவு 12 மணியிலிருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ரயில் கட்டணங்களை அசாதாரண முறையில் அதிகரிக்க போவதில்லை எனவும் எரிபொருள் விலையை சமாளிக்கும் வகையில் கட்டணம் இருந்தால் போதுமானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.