ஆரையம்பதி செல்வநகர் பகுதியில் ஆண்ஒருவர் தீ விபத்தில் சிக்கி எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவரது மகள் மருமகன் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
- Advertisement -
ஆரையம்பதி செல்வநகரைச் சேர்ந்த முன்னால் பொலிஸ் உத்தியோகதரும் தனியர்வங்கி ஒன்றின் பாதுகாவராக கடமையாற்றி வந்த 54 வயதுடைய சடாச்சரலிங்கம் ஜீவநாயகம் என்பவரே சிகிச்சை பலனின்றி 19 ம் திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
சம்பவதினமான அன்றிரவு மனைவியுடன் சண்டையிட்டு தனக்கு தானே மண்ணெண்யை ஊற்றி தீவை என மிரட்டியபோது விடுமுறையில் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் மகன் மற்றும் மகள் மருமகன் கோபம் கொண்ட நிலையில் தீயை பற்றவைத்து அவர் மீது எறிந்ததையடுத்து அவர் தீயினால் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கடந்த சனிக்கிழமை (19) திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து இதனுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மகனான பொலிஸ் உத்தியோகத்தர் அவரது மகள் மருமகன் தலைமறைவாகி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து தலைமறைவாகிவந்த உயிரிழந்தவரின் மகள் மருமகன் நேற்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 4 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிகவிசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்