திருகோணமலை நகரில் 3 நாட்களின் பின் இன்று கேஸ் விநியோகிக்கப்படுவதாக தகவல் அறிந்து அதிகாலை 3.00 மணி முதல் மக்கள் காத்திருந்தனர்.
- Advertisement -
அதிகாலை வேளையில் 400க்கும் அதிகமான மக்கள் சிலிண்டர்களுடன் சாம்பல்தீவு பாலத்தடி கேஸ் களஞ்சியத்தின் அருகே காத்திருந்தனர். கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.