புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று (19) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைவேலிப்பகுதியனை சேர்ந்த சியோன்ஷன் என்ற 1 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர்கேனில் விழுந்து உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
- Advertisement -
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குழந்தையின் உடல் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.