உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மகன் ஒருவர் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று கொச்சிக்கடை – கெமுனு மாவத்தை, மேற்கு கட்டான பகுதியில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
உயிரிழந்தவர் மேற்கு கட்டான கெமுனு மாவத்தையில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தந்தை குடிபோதையில் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மதிய உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை மகளை தாக்கியுள்ளார்.
- Advertisement -
அப்போது மகன் தந்தையை கத்தியால் குத்தியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. இதன்படி சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.