இலங்கையில் அரிசியின் விலை 300 ரூபாவை தாண்டக் கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
- Advertisement -
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
- Advertisement -
இவ்வாறான நிலையில் உள்நாட்டு அரிசியின் விலையும் அதற்கேற்ப அதிகரித்து கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவை எட்ட கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனி, பால் மா, மரக்கறிகள், எரிவாயு, எரிபொருள், பாண், பனிஸ், ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், செருப்புகள் போன்றவற்றின் விலை 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சீமெந்து, டைல்ஸ் மற்றும் மின் சாதனங்களும் கட்டுப்பாடின்றி உயரும்.
இந்த நிலைமைகள் நாட்டில் பணவீக்கத்தை மூன்று மடங்காக உயர்த்தும் என்றும், ஏழைகள் தவிர்க்க முடியாமல் குழிக்குள் விழுந்து பிச்சைக்காரர்களாக மாறும் நிலைமை கட்டாயம் ஏற்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.