இலங்கையில் நாளையதினம் (12) மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
- Advertisement -
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
- Advertisement -
அத்துடன் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை10 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுதினம் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 05 மணி தொடக்கம் இரவு 09 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 09 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.