2020ம் ஆண்டுக்கான க.பொ. சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விடைத் தாள் மீள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இணையவழியாக முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
- Advertisement -
அதன்படி, நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை விடைத் தாள் மீள் திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.